Friday, December 23, 2011

கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும்.
                                                                          farjana farvine - paris

பதில் : கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இருக்கிறது என்ற கருத்தில் ஸஹீஹான ஹதீஸ்கள் நிறையவே இருக்கின்றன.புகாரி, முஸ்லிம் போன்ற பல கிரந்தங்களில் இந்தத் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مَنْصُورٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهُوَ مَرِيضٌ فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (خ:5687)

காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; "சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்கள். நான், "சாம் என்றால் என்ன?'' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "மரணம்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ (خ :5688)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கருஞ்சீரக விதையில் "சாமை'த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள். (புகாரி – 5688)
"சாம்' என்றால் "மரணம்' என்று பொருள். "அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) "ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.

கருஞ்சீரகத்தை மருத்துவப் பொருளாக நாம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று நமக்கு மத்தியில் சிலர் மிஸ்வாக் என்ற பெயரில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அலைவதைப் போல் கருஞ்சீரகத்தையும் பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கக் கிடைக்கிறது. இப்படி பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலையும் படியோ அல்லது ஒவ்வொரு தொழுகையின் பின்னும் அதை உண்ணும் படியோ அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ எந்த இடத்திலும் வழிகாட்டவில்லை.
பதில் : ரஸ்மின் MISc

Read more »

SLTJயின் முதலாவது தேசிய பொதுக் குழு கொழும்பில்……


அன்பின் சகோதரர்களே!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 24-12-2011 அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா மஹா வித்தியாளய கேட்போர் கூடத்தில் சரியாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கிடைக்காத நிர்வாகிகள் 011 – 2677974 அல்லது 077 4781471 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு தலைமையகம் வேண்டிக் கொள்கின்றது.


Read more »

இலங்கையில் வஹாபி ஆயுதக் குழுக்கள்(?)


 நிரூபிப்பாரா அலவி மவ்லானா?
RASMIN M.I.Sc
இலங்கையின் கிழக்குப் பகுதியில்வஹாபி ஆயுதக் குழுக்கள் இயங்குவதாகவும், அவர்கள் மூலம் சூபித்துவ வாதிகளுக்கு அச்சுறுத்தல்இருப்பதாகவும் மேல் மாகாண ஆளுனர் அலவி மவ்லானா தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் வஹாபி ஆயுதக் குழுக்களுக்கு உதவி செய்வதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் தாம் முறையிட இருப்பதாகவும் அலவி மவ்லானா மேலும் தெரிவித்துள்ளார்.

அலவியின் கருத்து உண்மையானதா?

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் இருந்த ஆயுதக் கலாசாரத்தை இல்லாமலாக்கி சுதந்திரமான இலங்கையை தற்போதைய அரசு கட்டியெழுப்பியிருக்கும் இவ்வேலையில் அலவி போன்றவர்கள் தெரிவிக்கும் இது போன்ற பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை.

இதற்கு அலவியே சாட்சியாக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் லக்பிம நி்வ்ஸ் என்ற ஆங்கில நாளிதழில் ரியாஸ் ஸாலி என்ற ஒரு சூபியினால் வஹ்ஹாபிய தீவிரவாதம் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரையின் அபத்தம் தொடர்பாக அப்போதே அரசாங்கம் கருத்து வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து கொழும்பில் உலமாக்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அலவி இந்தத் தகவல் தவறானது என்பதை அந்த இடத்தில தெரிவித்ததை நவமணி போன்ற பத்திரிக்கைகள் அப்போதே பிரசுரித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

அது மட்டுமன்றி இலங்கையில் எந்த இடத்திலும் எவ்வித ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷ அவர்கள் அப்போதே இதனை மறுத்ததும் இங்கு கவணிக்கத் தக்கது.

பார்க்க





பாதுகாப்புச் செயலாளருக்குத் தெரியாதது அலவிக்கு தெரிகிறதா?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷ அவர்கள் எந்த ஆயுதக் குழுக்களும் இலங்கையில் இல்லை என்று மறுத்திருந்தும் அலவி மவ்லானா இப்படியான கருத்தை வெளியிடுகிறார் என்றால் பாதுகாப்பு செயலாளருக்குத் தெரியாத ஆயுதக் குழுக்கள் பற்றிய ரகசியம் எப்படி அலவிக்கு தெரிய வந்தது?

அது மட்டுமன்றி இலங்கையில் இயங்கும் ஜிஹாத் அமைப்புகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளும் தீவிரவாத இயக்கங்களும் நிதி மற்றும் ஆயுத உதவி செய்வதாக அலவி குறிப்பிட்டுள்ளார்.

அப்படி எந்த ஜிஹாத் அமைப்பு இங்கு இயங்குகின்றது என்பதை அலவி பகிரங்கப்படுத்தத் தயாரா?

இலங்கை முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக அரபு நாடுகள் உதவி வருவது ஒன்றும் ரகசியமான விஷயமில்லை. யுத்தம் நீங்கியதன் பின்னர் இலங்கையின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் அரபு நாடுகள் பலவும் பல விதங்களிலும் உதவி வருகிறது.

கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாகக் கூட கத்தார் நாட்டுடன் இலங்கை அரசு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதையும், புத்தளம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பை கத்தார் நாட்டுக்காக இலங்கை அரசு ஒதுக்கிக் கொடுத்ததையும் முழு நாடும் அறியும்.

மத்திய கிழக்கு நாடுகள் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்றால் அப்படிப்பட்ட நாடுகளுடன் தான் இலங்கை அரசு கை கோர்க்கிறது என்று சொல்ல வருகிறாராரா அலவி?

தீவிரவாத செயலில் ஈடுபடும் வஹாபிகளை காவல் துறை ஏற்கனவே கைது செய்ததாகவும் அலவி மேற்கண்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இலங்கையில் செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஒரு வஹாபியைக் கூட அலவியினால் காட்ட முடியாது என்பதே நிதர்சனமாகும்.

அலவியிடம் ஒரு கேள்வி.

உண்மையில் இலங்யைில் எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை. ஆனால் வஹாபிய ஆயுதக் குழுக்கள் இயங்குவதாகவும் அதற்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவுவதாகவும் கூறும் அலவி அந்தப் பட்டியலில் ஈரானையும் சேர்த்துக் கொள்ளத் தயாரா?

ஈரானின் உதவியுடன் காத்தான்குடி உள்ளிட்ட கிழக்கின் பல பகுதிகளிலும் புனரமைப்பு வேலைகள் நடை பெருகின்றது. யாழ்பாணம் வரை ஈரானின் நிதியுதவி கிடைக்கிறது. உங்கள் வாதப்படி ஈரானும் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று சொல்வீர்களா?

சொல்ல மாட்டீர்கள் ஏன் என்றால் ஈரான் தான் உங்களுக்கு ரோல் மாடல்.

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான தினகரனன் பத்திரிக்கையில் கூட கொழும்பு தெவடகஹ தர்காவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய ஆக்கத்தில் ஈரான் நாட்டின் “அல் ஜாமிஅத்துல் முஸ்தபா அல் ஆலமிய்யா” என்ற பல்கலைக் கழகத்தின் சிறப்புகளை(?) எடுத்தெழுதிய அந்த ஆக்கத்தில் இலங்கை சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்றதையும், அங்குள்ளவர்கள் இவர்களுக்கு கவுரவம் கொடுத்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் பார்வையில் இவைகள் என்ன சமாதான உடன்படிக்கைகளா? மத்திய கிழக்கு நாடுகள் தீவிரவாதத்திற்கு உதவி புரிவதாக கூறும் நீங்கள் ஏன் மத்திய கிழக்கின் முக்கிய ஷியா நாடான ஈரானுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறீர்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஈராம் மாத்திரம் தான் உங்கள் பார்வையில் தூய்மையான நாடா? அல்லது சூபிகளின் வளர்சிச்கு ஈரான் தான் துணை போகிறது என்பதினால் இந்த இரட்டை வேடமா?

அரசிடம் ஓர் வேண்டுகோள்.

தீவிர வாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு சுதந்திரமான முறையில் வாழும் இலங்கை மக்களுக்கு மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்களை அரசு இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அலவி போன்றவர்கள் தெரிவிக்கும் இது போன்ற பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

Read more »

Wednesday, December 21, 2011

பிற மேடைகளில் பிரச்சாரம் செய்வது குறித்து தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு




ஆர். ரஹ்மத்துல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவதுஇந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.
உதாரணத்திற்குவரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.
நாமாகக் கேட்டால் தானே தவறுஅவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறாநாம் எதையும் பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டாம்அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தானே தருகிறார்கள்இதில் என்ன தவறுஎன பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.
அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல வகையில் எதிர்த்தவர்கள்நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக் குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான் "பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை'' என்பது.
இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால் ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.

தீமையைத் தடுக்க இயலாத நிலை!
நீங்கள்மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால் அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன் இனைந்து  இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில்பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில் ஒரு காரை வைத்து 6%வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு கொடுமை நடந்தேறியது.
சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்டநிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.
வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத் தெரியவில்லையா?அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம் போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையாஏன் இந்த அவல நிலைபல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி  சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும் அவல நிலைக்கு ஆளானார்கள்.
இது ஒரு பக்கமிருக்கஇன்னொரு பக்கம் யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப் பிரியும்அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம் சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறிஅந்த ஒரு கூட்டம் என்பது ஷாஃபிஹனஃபிமாலிகி,ஹன்பலிதவ்ஹீத்அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் என்று விளக்கம் தருகிறார்.
மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர் கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை. கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.
பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி பீஸ் பீஸாகிப் போய்விட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால் தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும்இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
மத்ஹப்அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத் ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப் ஆதரவாளர் மட்டும் கிடையாது;கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஒப்பானவர்.

ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்
இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறிஇறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ் ஜ(கோ)மாலி வாதிட்ட போது,இறைவனுக்கு உருவம் உண்டு எனவும் இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.
ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும் ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில்,இறைவனுக்குப் பிள்ளை இல்லைபெற்றோர் இல்லை என கூறிவிட்டுஇறைவனுக்கு உருவம் இல்லை என்பதை திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.
எந்த அளவிற்கென்றால் அவர்இறைவனுக்கு உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும் எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.
இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:
நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்என்று கேட்டார்கள். அப்பெண்அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்?எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)
 இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்னஎனக் கேட்கிறார்.
இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போதுஇந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறிஇறைவன் எங்கும் இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.
இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால் தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும். இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.
கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு,தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் அந்த மேடைக்குதர்கா வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர்அழைக்கப்பட்டார். அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் "நபிகளாரை கனவிலும் நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக'' எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.
அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம்இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான் அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.
இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.

இரட்டை வேட நாடகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179
இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது. குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது. ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக மாறும் அவல நிலை ஏற்படும்.
நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.
பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும் வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போதுஅவர்களோடு பழகி பல்லிளித்துஅவர்களின் குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை ஏற்படும்.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்துஇன்று வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக் கண்ணியவான்களாக்க நேரிடும்.
வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க சீலராக்க நேரிடும்.
உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிரஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.
பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.

அவற்றை அடுத்த தொடரில் அறிவோம்இன்ஷாஅல்லாஹ்.....

Read more »

மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்


 

அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள்விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.
தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமாஅல்லது பெண் வீட்டில் விருந்தாஇது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.
வந்த புகார்விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா?அதுவும் இல்லை. மாறாகமண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.
திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து.
ஆனாலும் அதில் வரம்பு கடந்து சென்று விடக் கூடாது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது கூட அல்லாஹ் (பரக்கத்) அருள் செய்வானாக என்று தான் பிரார்த்திக்கின்றார்கள். அதனால் தம்பதியருக்கும் மிக மிக அவசியம் பரக்கத் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
பரக்கத் என்பதன் பொருள்
இந்த பரக்கத் என்பதன் பொருள் என்னஎன்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் திருமறை வசனங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
பூமியில் புதைந்து கிடக்கும் பரக்கத்
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் (பரக்கத்) பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
அல்குர்ஆன் 41:10
உலகில் இந்தப் பூமியில் மனித இனம் மட்டுமே உயிர் வாழவில்லை. ஊர்வன,பறப்பனநீர்வாழ் உயிரினங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. தாவர இனமும் அறிவியல் அடிப்படையில் உயிரினம் தான். கோடான கோடி உயிரினங்களுக்கும் தாவர வகைகளுக்கும் உணவு வழங்கும் ஓர் உன்னதத் தாயாகஊட்டச் சத்து வழங்கும் தானியக் களஞ்சியமாக பூமி திகழ்கின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் தொகை 700 கோடியாகும்.
இப்போது வாழ்கின்ற மக்களுக்கும்ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உலகம் அழியும் நாள் வரை உலகில் பிறக்கப் போகின்றவர்களுக்கும் உணவு அளிக்கவிருப்பது இந்தப் பூமி தான்.
மழையில் அடங்கிய மகத்தான பரக்கத்
அண்மைக் காலத்தில் தமிழகத்தின் தென் பகுதி கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கிமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் கூட வற்றிப் போய் விட்டது. அணைகளில் பாசனத்திற்கு அல்லகுடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத அளவுக்குத் தரை தட்டியது.
ஊராக இருந்தாலும்ஆறாக இருந்தாலும் அதற்குத் தனது உணவு வளத்தை பூமி தர வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் வான்மழை தான். இல்லையென்றால் மனித வாழ்வு அஸ்தமித்துப் போய் விடும். அந்த வான்மழைக்கும் அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றான்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும்பூமியிலிருந்தும் (பரக்கத்) பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் 7:96
சந்ததியில் அடங்கிய சமுதாய பரக்கத்
இந்தப் பூமியில் வாழும் 700 கோடி மக்களும் யார் என்கிறீர்கள்எல்லாம் நூஹ் நபியின் கப்பலில் இருந்தவர்கள் தான். வெள்ளம் வந்து விரோதிகள் அழிக்கப்பட்டு,கப்பல் தரையிறங்கிய போது கப்பலிலிருந்து இறங்கிய நூஹ் நபியின் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்லைப் பயன்படுத்துகின்றான்.
"நூஹே! உம் மீதும்உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் (பரக்கத்) பாக்கியங்கள் பொழியவும்நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!'' என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.
அல்குர்ஆன் 11:48
மறுபடியும் வரும் "மண்'ணின் பரக்கத்
யுக முடிவு நாள் ஏற்படும் போது பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும்எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில்பூமியைக் கழுவிகண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாகஉன்னிடமுள்ள வளங்களை (பரக்கத்தை) மறுபடியும் தருவாயாக'' என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்)ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே யொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால்பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமான தாயிருக்கும்.
நூல்: முஸ்லிம் 5228
இந்த ஹதீஸிலிருந்து பரக்கத்தின் பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது குறைந்த வாழ்வாதாரத்தில் நிறைவான வளம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ளலாம்.
ஆட்டு மந்தையில் பரக்கத்
ஒட்டகத் தொழுவங்களில் தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "ஒட்டகத் தொழுவங்களில் தொழாதீர்கள். ஏனெனில் அவை ஷைத்தான்களாகும்'' என்று பதில் சொன்னார்கள். அவர்களிடம் ஆட்டுத் தொழுவங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அத்தொழுவங்களில் தொழுங்கள்! ஏனெனில் அவை அருள் (பரக்கத்) நிறைந்தவையாகும்'' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 493
இன்று உலகில் கோடிக்கணக்கான ஆடுகள் உணவுக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றன. அவை ஈனுகின்ற குட்டிகளோ மிகக் குறைவாக இருப்பினும் பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பன்றிகள் அதிகமான குட்டிகள் போடுகின்றன. அவற்றின் பலன்கள் மற்றும் உணவுக்காக அறுப்பதும் மிக மிகக் குறைவு தான். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் உலகில் ஏராளமான பன்றிகள் பெருகிப் போயிருக்க வேண்டும். ஆட்டினம் அழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் ஆட்டினம் பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.
இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான அற்புதங்கள். பரக்கத்திற்குரிய அரிய சான்றுகள்.
இந்த பரக்கத்தை மணமக்கள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திருமணத்தை எளிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மண்டபத் திருமணங்கள் இதற்கு நேர் மாற்றமானவை. மண்டபத்திலும் ஒரு சில எளிய திருமணங்கள் நடந்தாலும் அவை ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாகத் தான் அமைகின்றன.
மண்டப வாடகையிலேயே பணக்கார வாடை தெரிய ஆரம்பித்து விடுகின்றது. அடுத்தபடியாகமண்டப அரங்கத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்கு,அலங்காரங்கள் என்று அதன் பரிமாணம் அகன்று கொண்டே செல்கின்றது. எளிமைத் திருமணத்திற்கு இது எள்ளளவுக்கும் கட்டியம் கூறுவதாக இல்லை. ஏழையின் திருமணமாகவே இருந்தாலும் மண்டபத் திருமணம் ஒரு மாளிகைத் திருமணமாகக் காட்சியளிக்கின்றது.

                                                     நன்றி: ஏகத்துவம் மாத இதழ்
 

Read more »

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற இந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு முன் சமகால உலக அரசியல் பற்றியும், அதன் பாதிப்பாய் உருவெடுத்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா வழங்கல் நிலைப்பாடு பற்றியும் தெளிவு பெறுவது அவசியமாகும்.

உலக மயமாக்கல் உலமா சபையை எப்படி மாற்றியிருக்கிறது பாதித்திருக்கிறது என்று பார்ப்பது அவசியமாகும்.

அமெரிக்கா ஏகாதிபத்தியம் அபாயகரமாக உலகமயமாக்களோடு எல்லா நாடுகளையும், எல்லா சமூகங்களையும் கலாசார, அரசியல் ரீதியாக அழித்து வருகின்றது

அமெரிக்கா பலம் பொருந்திய தனது இராணுவ கட்டமைப்பின் மூலம் தனக்கு தேவையான நாடுகளை ஆக்கிரமிக்கிறது. அறிவியலில் தன்னோடு போட்டிபோடும் நாடுகளை அது அச்சுறுத்துகின்றது.

மனிதநேயமற்ற அதன் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் பயங்கரமானது. அதன் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு மிகவும் பலமானது. ஏனைய நாடுகள் மீதான இந்த கலாசார ஆக்கிரமிப்பு நாகரீகம் என்ற போர்வையில் புகுந்து நாசத்தை விளைவிக்கிறது. 
அது நாடுகளின் சமூக, கலாசாசார ரீதியிலான அடையாளங்களுக்கு கல்லறை சமைக்கிறது.

பூகோள ரீதியில் ஈரம் காயாத இரத்த வரலாறொன்றை அதன் ஈராணுவ கலாசார பலம் பதித்து வருகிறது.

அமெரிக்காவின் இராணுவ, மற்றும் கலாசார ரீதியிலான இரண்டு ஆக்கிரமிப்புகளும் சுரண்டல் சூறையாடல் என்ற முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தில் தடம் பதித்தவையே!

அமெரிக்காவிற்கு அதிக இலாபத்தை இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளும் ஈட்டிக் கொடுக்கின்றன. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தி எண்ணெய் வளங்களை அது கொள்ளையடிக்கின்றது.

அரபு நாடுகளில் வேகமாய் பரவும் அமெரிக்க கலாசாரம் அந்த நாட்டை இஸ்லாத்தின் உயிரோட்டத்திலிருந்து துரத்தி தூரமாக்கி வருகிறது.

அமெரிக்க கலாசாரத்தின் ஆரம்ப அடையாளமே யூத தயாரிப்பான ‘‘கொக்கா கோலா”, ‘‘பெப்ஸி கோலா”. அவை அரபுகளின் அன்றாட உணவில் முக்கிய பாத்திரங்கள்.

‘‘கோலா’’க்கள் குடிக்காமல் அரபுகளின் குரல்வளைக்குக் கீழ் உணவே இறங்காது. நாசகாரர்களின் தயாரிப்போடு அரபுகளுக்கு நேசம் அதிகம்!

மேற்குலகின் கலாசாரம் முழு உலகும் பரவ வேண்டும். அசிங்கமான கலாசாரத்தில் முழு உலகையும் திணிக்கவேண்டும் ஏன்ற தந்திரத்தால் தனது கலாசாரத்தை வர்த்தக மயமாக்கி உலகை ஆக்கிரமித்து வருகிறது அந்த ஏகாதிபத்தியம்.

இன்று வாழ்க்கையின் சகல துறைகளிலும் பாதிப்பு செலுத்தும் ஒரு பயங்கரமாக அதன் ஆக்கிரமிப்பு உள்ளது. உலமா சபையின் செயற்பாடுகளுக்கும் உலகை ஆக்கிரமிக்கும் இந்த கலாசார ஆதிக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம்.

இது மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் போடும் ஒரு முடிச்சா என்று கூட நீங்கள் முணுமுணுக்கலாம்.
எதிர்காலத்தை இருள்மயமாக மாற்றும் ஒரு சர்வதேச சதியை, அச்சாணியாய் வைத்து இந்த முஸ்லிம் உம்மத் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்கத்தான் அப்படி ஒரு சுற்று சுற்றி வந்தேன்.
தேசம், சர்வதேசம் என்ற எல்லைகளைத் தாண்டி முழு முஸ்லிம் உம்மத்தும் அமெரிக்க சதியின் வட்டத்தை வலம் வந்துக்கொண்டிருக்கின்றது.
காட்டாறு போல வரும் கலாசார அக்கிரமிப்பை கண்மூடித்தனமாய் பின்பற்றிவரும் இந்த உம்மத்தின் நிலையும், அந்தக் கலாசாரத்திற்கு பச்சைக் கொடி காட்டி பத்வா வழங்கும் இந்த உலமா சபையின் செயற்பாடும் மோசமான எதிர்காலமொன்றுக்கான முன்னுதாரணமாகும்.
அமெரிக்கக் கலாசாரத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உம்மத்துள் உருவாகியிருக்கும் எதிர்விளைவுகளையும் இனிபார்ப்போம்…
பெற்றோல் பாலைவன பூமியில் உற்பத்தியாகி உலகையே இயக்கி, உயிரை வழங்கிக்கொண்டிருக்கிறது . அந்த உயரிய வளத்தை மிக குறைந்த விலைக்கு அமெரிக்காவிற்கு விற்று விட்டு, அமெரிக்க தயாரிப்பான கோலாவை அதிக விலைக்கு அரபு நாடுகள் வாங்குகின்றன. 
அமெரிக்காவிற்கு விற்பனையாகும் ஒரு லீற்றர் பெற்றொலின் விலை வெறுமனே 24 (இருபத்து நான்கு) ரூபாய். அமெரிக்க தயாரிப்பான (இரசாயண தண்ணீர்க் கலவையான) ஒரு லீற்றர் கொக்கா, பெப்ஸி கோலாவை அரபு நாடுகள் நூற்று முப்பது ரூபாயை கொடுத்து வாங்குகிறது. குடித்து மகிழ்கிறது.

தன்னிடமுள்ள வளத்தின் பெறுமதியை அளவிட தெரியாத அளவிற்கு உலக மாயையில் மயங்கி மந்தப் புத்தியில் மடிந்து கிடக்கிறது இந்த அரபு சமூகம். அரபு சமூகம் அறிவியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு எப்படி ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றதோ அதே போல அதன் கலாசார ஆக்கிரமிப்பு முழு உலகையும் கொள்ளையடிக்கின்றது. 
இதனை தெளிவு படுத்தத்தான் இந்த உதாரணத்தை இங்கு முன்வைத்தேன். நான் வைத்த கோலா, பெற்றோல் விலையில் சிலவேளை சின்ன மாற்றங்கள் இருக்கலாம்.
இன்று அமெரிக்க கலாசாரத்திற்கு அடிமைப்பட்ட அரபுகளை விட, ஈமானிய உணர்வுகளை பாதுகாத்து வாழ்கின்ற மக்கள் அரபு அல்லாத ஏனைய நாடுகளில்தான் அதிகம் வாழ்கின்றார்கள். 
அந்த நாடுகளை இந்த அமெரிக்க கலாசாரம் எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது. ஆதற்கான ஒரு புதிய வழிதான் அமெரிக்க பொருட்களுக்கு ஷரீஆ அங்கீகாரம். 
அதாவது ஹலால் அங்கீகாரம். 
ஆந்த அங்கீகாரத்தைப் பெற உலமா சபைக்கு இப்போது பல லட்சம் ரூபாய்களை அள்ளி வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றன பல்தேசிய நிறுவனங்கள்.
பத்வா என்ற போர்வையில் அசிங்கமான அமெரிக்க கலாசாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
உலமாசபை கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க உணவு நிறுவனங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பத்வா வழங்குகிறது. 
மனிதனுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கும் அமெரிக்க பாஸ்ட் பூட் உணவு முறை அந்த நாட்டிலேயே பல சமூகவியல் பிரச்சினைகளை தோற்றுவித் திருக்கிறது. 
(அமெரிக்க சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினர் அவர;களின் உணவு பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு போன்ற உடலியல் ரீதியிலான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.)
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் இந்த அமெரிக்க உணவு விடுதிகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உலமா சபையின் ஹலால் பத்வாவை குறிப்பிடலாம். உலமா சபையின் பத்வாவை பெற்றுக்கொண்ட இந்த நிறுவனங்கள் ஊடகங்களில் உலமா சபையின் ஹலாலை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்கின்றன.
முஸ்லிம்களை அமெரிக்க உணவுப் பழக்கத்திற்கு திசை திருப்ப உலமா சபையின் பத்வா(?) இன்று பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவே திட்டமிட்டு வடிவமைத்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கிய அது இஸ்லாத்திற்கெதிராக வெளிப்படையாகவே செயலாற்றியது. 
இதனால் உலக முஸ்லிம்களின் மனங்களில் அமெரிக்க எதிர்ப்பு வளர்ந்தது.
அப்படி எழுந்த அமெரிக்க எதிர்ப்பு அலைகளும், ஆப்கானில், பலஸ்தீனில், ஈராக்கில், லெபனானில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் கொலைகளும், அநியாயங்களும் உலகளாவிய ரீதியில் எதிர்நிலையைத் தொற்றுவித்தது.
அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. சர்வதேச ரீதியாக முஸ்லிம் அறிஞர்கள் அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று கூட பத்வா வெளியிட்டார்கள். 
அதனால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இலங்கையில் கூட அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. இன்றும் பகிஷ்கரிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யவே ஹலால் பத்வா சூழ்ச்சி சந்திக்கு வந்தது. 
இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா சபை இதனை ஒழுங்காக நிறைவேற்றும் ஊழியனுக்குரிய கதாபாத்திரத்தைப் பெற்றும் கொண்டது.
அமெரிக்க பொருளாதாரத்தோடு உயிராக இருக்கும் வட்டி தொடர்பான முஸ்லிம்களுக்குள்ள முரண்பாட்டை முடக்க வேண்டிய தேவையை உணர்ந்த இந்த இஸ்லாத்தின் எதிர்சக்திகள், போலி இஸ்லாமிய வங்கிகளின் உருவாக்கத்திற்கு முஸ்லிம்களை உட்சாகப்படுத்த சதித் திட்டம் போட்டன. 
இந்த சதியின் செயல் வடிவத்திற்கு உயிரூட்டியது உலமா சபை.

வட்டியை விட்டு தூரமாகியிருந்த முஸ்லிம்களை வேட்டையாட அதே வட்டி நிறுவனங்கள் ஒரு புதிய திட்டம் வகுத்தன. உலமா சபையின் ஹலால் பத்வா, இஸ்லாமிய வங்கி என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தது. வட்டியில் வாழ்ந்த வங்கிகள் திடீரென்று ஹலால் வங்கிகளை குட்டிகளாய் இட்டன. 
காலகாலமாய் வட்டியில் குட்டி போட்ட இந்த வங்கிகள் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் போட்ட புதிய குட்டிக்கு உலமா சபையே “இஸ்லாமிய ஹலால் வங்கி ” என்று பெயர் சூட்டியது. பத்வாவின் மூலம் அங்கீகாரம் வழங்கியது.
ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக ஹராத்தை ஹலாலாக மாற்றும் இந்த வேலைத்திட்டம்; முஸ்லிம்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

சிலிங்கோ புரொபிட் செயாரிங் என்ற நிதி நிறுவனத்திற்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியது. உலமா சபையின் பத்வாவை நம்பி பணத்தை வைப்பிலிட்ட பதினாறாயிரம் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 
முஸ்லிம்களின் பணம் 1400 கோடி ரூபாய்களை இந்த நிதிநிறுவனம் மோசடி செய்துள்ளது. இவர்கள் பணத்தை இழந்து இன்று நிர்க்கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். உலமா சபையின் கண்மூடித்தனமான பத்வா முஸ்லிம்களை கஷ்டத்தில் வீழ்த்தியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய(?) வங்கியில் பல ஆயிரம் ரூபாய்களை “ஆலோசனை வழங்குகிறோம்” என்ற போர்வையில் ஆலோசகர;களாக சேவையாற்றிய உலமா சபை அங்கத்தவர்கள் மாதாந்த ஊதியமாக பெற்றிருக்கின்றார்கள். உலமா சபை அங்கத்தவர்கள் பலர் அந்த வங்கியிடமிருந்து பல லட்சம் ரூபாய்களைக் கடனாக பெற்றும் இருக்கின்றார்கள். பெற்ற கடனை இன்று வரை அடைக்காமல் இருப்பதாக அந்த நிறுவனம் குற்றம் சாடடி இருக்கின்றது. இந்த செய்தி பல தேசிய பத்திரிகைகளிலும்; வெளிவந்திருக் கின்றன..

உலமா சபையின் பத்வா அங்கீகாரத்தை ஏற்றே முஸ்லிம்கள் 1400 கோடி ரூபாய்களை இந்த வங்கியில் வைப்பிலிட்டனர். இப்போது முஸ்லிம்களின் இந்த பணத்தை வங்கி ஏப்பமிட்டுவிட்டது. 
உலமா சபை அதற்கு பொறுப்பு நிற்காமல் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் தூர நழுவி வருகின்றது. 
“நாங்கள் பத்வா வழங்கியது உண்மை. ஆனால் இப்போது நாங்கள் அந்த வங்கியிலிருந்து விலகி விட்டோம் அதற்கும் எங்களுக்கும் இப்போது எந்த தொடர்புமில்லை ” 
என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்கிறது இந்த உலமா சபை. அறிவீனமாக அறிக்கை விட்டு முஸ்லிம்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்கின்றது.


உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கி ஆசிர்வதிக்கப்பட்ட சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் முஸ்லிம்களிடம் இருந்து பெற்ற பணத்தை இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் முதலீடு செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்லாத்திற்கு முரணான வியாபாரங்களுக்கும் முதலீடு செய்திருக்கின்றது. இதை ஜம்இய்யதுல் உலமா கண்டு கொள்ளாமல் இரந்திருக்கிறது. 
இந்த இரகசியத்தை அறிந்த பணத்தை வைப்பிலிட்ட முஸ்லிம்கள் இன்று வேதனையடைகின்றனர். அவர்கள் பணம் இழந்தது மட்டுமல்லாமல் அவர்களின் பணம் இஸ்லாம் தடை செய்த வியாபாரங்களுக்கு மூலதனமாகியிருக்கிறது.

இந்தப் பாவத்திற்கும் உலமா சபையே பதில் சொல்ல வேண்டும். 
சமூகத்தில் தலைமைத்துவம் வகித்து செய்ய வேண்டிய கடமைகள் அனேகம் உலமா சபைக்கு இருக்கின்றன. 
கல்வி, பொருளாதார ரிதியில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.. பாடசாலை தொடர்பான, வளப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. 
அவற்றையெல்லாம் மறந்து விட்டு பணத்தை மையப்படுத்திய வங்கி, வர்த்தகம் தொடர்பான பணம் சம்பாதிக்கும் ஹலால் பத்வா செயற்திட்டங்களுக்கே அது முன்னுரிமை வழங்கியது.

அது மட்டுமல்லாமல் இந்த மோசமான கலாசார ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போன உலமா சபை, அமெரிக்க, யூத பல்தேசிய நிறுவனங்களுக்கும் இஸ்லாம் தடை செய்த ஹராமான இறைச்சி உணவுவகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஹலால் பத்வாவை வழங்கி பெரும் தொகையான பணத்தை பகரமாக பெற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க, மாற்று மத வட்டி, உணவு நிறுவனங்களுக்கு பத்வா வழங்க அவசரமும், அவசியமும் உலமா சபைக்கு ஏன் ஏற்பட்டது? இந்த புதிய உணவு கலாசாரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்க காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு உண்பதற்கு இவற்றை தவிர வேறு உணவேயில்லை என்றிருந்தால் உலமா சபை உடனே முன் வந்து இந்த உணவை உண்ணுங்கள் என்று ஹலால் பத்வாவை வழங்குவதில் பிழையே இல்லை.
மேற்படி யூத, கிறிஸ்தவ கம்பனிகளிடமிருந்து பணம் அறவிட்டு பத்வா வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிக மோசமான வழிகாட்டலை உலமா சபை வழங்கியிருக்கிறது. 
இந்தக் குற்றச்சாட்டு உலமா சபைக்கு எதிராக சமூகத்தில் பரவலாக எழுந்தும் வருகிறது. 
கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டு பத்வா வழங்கும் வியாபாரத் தனத்தில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இயங்கி வந்ததன் விபரீதத்தை இன்று சமூகம் நன்றாக அனுபவித்துக்கொண்டிருகின்றது.
அமெரிக்க கலாசார, அரசியல் சதி ஒன்றுக்கு உலமா சபை துணை போனதால் அவர்களுக்கல்ல மக்களுக்குத்தான் தண்டனை கிடைத்தது. 
கடந்த ரமழான் மாதம் பிஸ்ஸா உணவு நிறுவனம் ஒன்று கொக்கா கோலா பெரிய போத்தல் ஒன்றுடன் பிஸ்ஸா ஒன்றுக்கான விளம்பரத்தை செய்திருந்தது. கொக்கா கோலா போத்தலோடு உலமா சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட பிரசுரத்தை கொழும்பில் வீடு வீடாக அந்த நிறுவனம் பகிர்ந்து அளித்தது. பிஸ்ஸாவிற்கு கொடுத்த ஹலால் பத்வா மறைமுகமாக கோலாவிற்கும் பயன்படுத்தப்பட்டது.

யூத சக்திகளின் கோலாவை குடிப்பதுவும், பலஸ்தீன, ஈராக்கிய முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடிப்பதுவும் சமமான செயல் என்பதை உலமா சபை நன்கு உணர்ந்திருக்கிறது. என்றாலும் பணத்தை மையமாக வைத்து செயற்படுவதால் அதன் சாதக, பாதகங்களை சரியாக இனம் காண முடியாமல் இப்போது திண்டாடி நிற்கிறது.

திறந்த பொருளாதாரம் பணத்திற்கு பின்னால் ஓடக்கூடிய ஒரு சமுதாயத்தை தோற்றுவித்தது உண்மைதான். 
உலமா சபை அப்படி ஓடுவதை முஸ்லிம்களால் அங்கிகரிக்க முடியாது. பணத்திற்கு முன்னால் அல்லாஹ்வின் தீனை பகடைக் காய் ஆக்க அனுமதிக்க முடியாது. பத்வாவை விற்று பணம் சம்பாதிக்க இஸ்லாத்தில் இடமே கிடையாது.

பத்வா ஒரு வியாபார பண்டமல்லவே.

அது அல்லாஹ்வின் தீன் வழங்குகின்ற ஒரு தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை பல லட்ச ரூபாய்களுக்கு வழங்கும் அதிகாரத்தை இவர்கள் எப்படி பெற்றார்கள்?

பத்வாவை பல லட்ச ரூபாய்களுக்கு விற்க இஸ்லாம் இவர்களுக்கு அனுமதி அளிக்கின்றதா?

பணத்திற்கு விற்ற பத்வாவினால் ஏற்பட்ட விளைவு என்ன?

ஹராமான நிறுவனங்களை மேலோட்டமாக அவதானித்து பத்வா வழங்கி பணத்தை வாங்கி பெட்டியை நிறைப்பதால் யாருக்கு லாபம்?

விளைவு என்ன.....?
சுப்பர் மார்கட்களில் பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் கூட உலமா சபையின் பத்வா நோட்டீஸ் தொங்கிக் கொண்டிருக்கிறது.
பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் குந்தியிருக்கும் உலமா சபையின் ஹலால் பத்வாக்களைப் பார்த்து.... இப்போது பன்றி இறைச்சி மீதிருந்த வெறுப்பு முஸ்லிம்கள் மத்தியில் குன்றி வருகிறது.
பன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட தயங்கிய, கூச்சப்பட்ட, அருவறுப்பு பட்ட சமூகம் இன்று பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உள்ள கோழி இறைச்சியை எவ்வித சஞ்சலமும் படாமல் பிரச்சினை இல்லாமல் பலர்வாங்கிச் செல்வதை காணக் கூடியதாய் இருக்கிறது.
இந்த பாதகத்திற்கு காரணம் என்ன? பன்றி இறைச்சி விற்பனைக்கு பெயர் போன வெளிநாட்டு கம்பனிகளுக்கு உலமாசபை ஹலால் பத்வா வழங்கியதே.
ஊள்ளுர் கோழி இறைச்சி நிறுவனங்களுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கிடையில் இடையில் ஒரு போட்டியைக் கூட இது ஏற்படுத்தியது. 
முஸ்லிம்களிடம் மாத்திரம் கோழி இறைச்சி வாங்கியவர்களை பல்தேசிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மாற்றுமத நிறுவனங்களை நாட உலமா சபை உதவி செய்தது. தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கோழி இறைச்சி வர்த்தக நிறுவனங்களுக்கு கூட இதனால் பெரிய அடி விழுந்தது. 
முஸ்லிம்களின் கடையில் இறைச்சி வாங்கி உண்டவர்களுக்கு, இல்லை இல்லை அந்நிய மத நிறுவனங்களிலும் இறைச்சி வாங்கி உண்ண முடியும் பிரச்சினையே இல்லை...என்ற ஒரு புதிய வழியை உலமா சபை காட்டிக் கொடுத்தது.
ஹராம் தொடர்பாக இறுக்கமாக இருந்த சமூகத்தின் மனநிலையை உலமா சபை இப்போது தளர்த்தியிருக்கிறது. இலகுவாக்கியிருக்கிறது.இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தேவையாய் இருந்த ஒன்றை உலமா சபை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கிறது.
உலமா சபை அவசரப்பட்டு ஹலால் பத்வா வழங்குவது பணத்தை அடிப்படைகாக் கொண்ட செயற்பாடு என்பதை அதன் நடவடிக்கைகள் நிரூபித்தக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் எத்தனையோ ஹராமான செயற்பாடுகள் மலிந்து கிடக்கின்றன. ஏன் அவற்றிற்கு உலமா சபையால் ஹராம் பத்வா வழங்க முடியாமல் இருக்கிறது. 
மார்க்கத் தீர்ப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஹராத்தையும், ஹலாலையும் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பாக முன்வைக்க வேண்டும்?

உலமா சபையென்றால் ஹலால் பத்வா மட்டும் தானா வழங்க முடியும்? 


ஏன் ஹராம் பத்வா வழங்க முடியாதா? 


ஹலால் ஹராம் இரண்டைப்பற்றிய கட்டளையும் சமூகத்திற்கு சொல்லத்தானே வேண்டும்?
சூதாட்டம் ஹராம் தானே? எத்தனை முஸ்லிம்கள் போதிய அறிவோ கரிசனையோ இல்லாமல் பாதை நெடுகிலும் “சுவீப் ” டிக்கட்டுகளை வாங்கி சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள்? எத்தனைப் பேர் புகைபிடிக்கின்றார்கள்? எத்தனைபேர் மதுபானம் அருந்துகின்றார்கள்? 
சீதனம் பெண் இனத்திற்கே கொடுமை புரிகிறதே! சமுதாயம் மஹரை கொச்சைப்படுத்துகிறதே! ஏன் உலமா சபை இவற்றிற்கு ஒரு பத்வாவை வெளியிட்டு பள்ளிவாசல்களில் தொங்க விடக் கூடாது? 
சமூகம் எத்தனை ஹராமான விடயங்களை செய்துகொண்டிருக்கிறது? ஒரு முஸ்லிம் எத்தனை ஹராமான விடயங்களோடு பின்னிப்பிணைந்திருக்கிறான். அவற்றை உலமா சபையால் பத்வாவாக வெளியிட முடியாதிருப்பதற்கு காரணம் ஹராம் பத்வாவிற்கு பணம் வழங்க இந்த சமூகத்தில் யாருமே இல்லாமல் இருப்பதுதானே!
மற்றும் ஹலால் பத்வா போன்றல்ல ஹராம் பத்வா பல நிறுவனங்களுக்கு நஷ்டத்தை உருவாக்கும். உலமாசபைக்கு அச்சுறுத்தல்கள் வரும் அதனால்தான் உலமா சபை ஹராம் விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறது
உலமா சபை ஹராமுக்கும் பத்வா வழங்கவேண்டும். 
அந்த பத்வாவிற்குரிய பணத்தை பள்ளிவாசல் பள்ளிவாசலாய் பிச்சை எடுத்தாவது கொடுக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும்.
.
ஹலால் தீர்ப்பிற்கு பணம் கிடைக்கிறது. ஹராம் தீர்ப்பிற்கு பணம் கிடைப்பதில்லை. ஹலால் பத்வா வியாபார, லாபம் நோக்கம் கருதி உலமா சபையிடம் வேண்டப்படுகிறது. 
ஹராம் பத்வாவை கேட்பதற்கு யாருமேயில்லை. ஹலால் பத்வாவை வைத்து உலமா சபையும் வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றன.
ஹராம் பத்வாவினால் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. இதனால் யாருக்கும் ஹராம் பத்வா தேவையே இல்லை. 
அதனால் சமுதாயத்தில் மலிந்துள்ள ஹராமான விடயங்கள் பற்றி பத்வா வெளியிட உலமா சபை முயற்சிப்பதுமில்லை. அதற்கு தேவையுமில்லை.
இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளும் சமூகத்தில் தோன்றிவரும் மோசமான எதிர் விளைவு நிலையை இந்த உலமா சபை புத்திஜீவிகள்(?) புரியாமல் இருக்கின்றனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று பத்வா வழங்கிய யூசுப் அல் கர்ழாவி அவர்களை மதிக்கின்ற பலர் உலமா சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள்.
உலமா சபையால் பள்ளிவாசல்களில் தொங்க விடப்பட்டுள்ள ஹலால் பிரசுரத்தில் பெண்களின் அழகுசாதனப் பொருட்களான பல வர்ண லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் கூட அச்சிடப்பட்டிருக்கிறது. உலமா சபையின் பார்வையில் லிப்ஸ்டிக், கியூடெகஸ் ஹலாலாக இருந்தால் உலமா சபையினர் தமது மனைவி மக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் உலமா சபை என்ன சொல்ல வருகிறது? லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் படம் ஹலால் போர்வையில் ஏன் தொங்க விடப்பட வேண்டும்? இது முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க கலாசாரத்தை மறைமுகமாக திணிப்பதற்கு அந்த கலாசாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாக ஏன் இதை எம்மால் கொள்ளமுடியாது?
அண்மையில் அல்கஹோல் அடங்கிய ஒரு பொருளுக்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியிருக்கிறது.
ஹராத்தை ஹலாலாக்கும் அமெரிக்க சதிக்கே இன்று உலமா சபை துணைபோகிறது. பணத்திற்கு அது விலைபோகிறது என்ற உண்மையை சமூகம் உணர்ந்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளுக்கும், நாசகார சக்திகளுக்கும் உதவியளிப்போர் யாராக இருந்தாலும் அவர்களை முஸ்லிம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை பாதுகாத்திட எல்லோரும் அணி திரள வேண்டும்.
அநியாயத்தைக் கண்டும் அமைதியாக, எடுத்துச் சொல்லாமல் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்...!

இது தவ்ஹீத் சாராத ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்  

Read more »